Pages

Friday, June 21, 2019

2020 மார்ச்சில் புதிய பாடத்திட்டபடி தேர்வு


''மார்ச் 2020ல் நடக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வுகள் புதிய பாடத்திட்டப்படி தான் நடக்கும்,'' என அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 1-க்கு புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள் நடந்தது. இக்கல்வி ஆண்டில் (2019-- 2020) பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2விற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்ட புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.எனவே பத்து, பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் 2020 மார்ச்சில் நடக்கும் அரசு பொது தேர்வை புதிய பாடத்திட்டத்தின்படியே எழுத வேண்டும். பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத, தேர்வில் பங்கேற்காத மாணவர்களும், அந்தந்த பாடத்தினை புதிய பாடத்திட்டப்படியே தேர்வுகள் எழுத வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment