Pages

Thursday, November 08, 2018

ஓய்வூதியம் வட்டி உயர்வு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கான வட்டி, உயர்த்தி அறிவிக்கப்பட்டுஉள்ளது.புதிதாக பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, ஜூலை, 1 முதல், செப்., 30 வரையிலான காலத்திற்கு, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது, அக்., 1 முதல், டிச., 31 வரையிலான காலத்திற்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர், சண்முகம் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment