Pages

Sunday, September 02, 2018

MORNING PRAYER 3-9-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:42

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

உரை:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

பழமொழி :

Be first at a feast and the last to slander

பந்திக்கு முந்து, படைக்கு பிந்து

பொன்மொழி:

இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம்.
ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது.

- ஸ்ரீசாரதாதேவி.

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______________ வாரமாக கொண்டாடி வருகிறது?
வனவிலங்கு

2.சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்?
ஆர்.கே. சண்முகம் செட்டியார்

நீதிக்கதை :

கருநாக பாம்பும், காகமும்
(The Crow and the Snake - Short Story)

#செய்திகள்

1)10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

2)வெப்பச்சலனம்: தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

3)மேட்டூர் அணையில் நீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

4)தமிழகம் முழுவதும் சனிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 5 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

5)2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியா 69 பதக்கங்களை குவித்துள்ளது

No comments:

Post a Comment