Pages

Thursday, March 29, 2018

கவுன்டர்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கும் திட்டம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு


தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு செய்ய விண்ணப்பிப்பவர்களுக்கு அடிப்படை கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கும் ‘பயணிகள் முன்பதிவு திட்டம்’ வரும் ஏப்ரல் 2ம்தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் 3 மாதத்துக்கு பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தப்படும்.

ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையங்களில் மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கீழ் கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி பெற முன்பதிவு செய்யும் ரயில் கட்டணம் ரூ.100க்கும் மேல் இருக்க வேண்டும். இந்த தள்ளுபடி திட்டம் சீசன் டிக்கெட் எடுப்பவர்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு பொருந்தாது. புறநகர் ரயில்களில் பயணம் செய்ய சீசன் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 0.05 சதவீதம் தள்ளுபடி வழங்கும் முறை ஏற்கனவே உள்ளது. முன்பதிவு மையங்களில் முதல் பட்டியலில் வருபர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment