Pages

Wednesday, January 10, 2018

குழந்தை நேய கற்றல் முறை

*New Pedagogy method புதிய கற்றல்-கற்பித்தல் அணுகுமுறை* (குழந்தை நேயக் கற்றல் முறை)

1. *ஏணிப்படி,அடைவுத்திறன் அட்டவணை இல்லை*

2. *ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்குரியது*

3. *நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு SALM method*

4. *முழுமையான பாடம் பல அலகுகளாக(Unit) பிரிக்கப்படுகிறது*
5. *ஒரு  பாடவேளைக்கு 90 நிமிடங்கள்.காலையில் இரண்டு பாடவேளைகளும்,மதியம் ஒரு பாடவேளையுமாக பிரித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது*

6. *அட்டைகளை கற்பித்தல் துணைக்கருவிகளாக பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு குழந்தைக்கும் பயிற்சி ஏடுகளின் தொகுப்பாக ஒரு புத்தகம் கொடுக்கப்படும்*

7. *Low level,கம்பிப் பந்தல்,புத்தகப் பூங்கொத்து,வீட்டுப்பாடம்,காலநிலை அட்டவணை இவைகளில் மாற்றம் இல்லை*

8. *பொதுவாகக் குழந்தைகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தாலும்,வகுப்பறை நிலைமைக்கேற்ப மெதுவாகக் கற்போருக்காக ஒரு குழு,மீத்திறன் குழந்தைகளுக்காக ஒரு குழு ஆசிரியர் அமைத்துக் கொள்ளலாம்*

9. *Long leave முடிந்து குழந்தை வரும்போது குழந்தையின் கற்றல் திறனுக்கேற்ப அக்குழந்தையினை பொருத்தமான அலகிலிருந்து தொடங்கச் சொல்லலாம்*

10. *இரண்டாம் பருவத்திலேயே பரீட்சார்த்த முறையில் சென்னை,காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 16 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. மூன்றாம் பருவத்தில் ஒன்றியத்திற்கு 2 தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளிலும், 2018-19 கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும்*

No comments:

Post a Comment