Pages

Tuesday, January 16, 2018

4 தமிழக அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து


பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த இயக்குனர், கார்மேகம் உள்ளிட்ட நான்கு பேருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு, பணி அனுபவம், ஆங்கில மொழித் திறன், பணித் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தும், அதற்கான பதவி உயர்வும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு, நான்கு, ஐ.ஏ.எஸ்., இடங்களுக்கு, 2017 டிச., 27ல், புது டில்லியில் நேர்காணல் தேர்வு நடந்தது. அதில், தமிழகத்தை சேர்ந்த, 19 அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்ச்சி பட்டியல், நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தொடக்க கல்வி இயக்குனராக இருந்த கார்மேகம், ஊரக வளர்ச்சி துறை அதிகாரி, மேகராஜ், பதிவுத்துறை கூடுதல், ஐ.ஜி., ரத்னா மற்றும் கூட்டுறவு துறை சிறப்பு அதிகாரி, சிவன் அருள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

No comments:

Post a Comment