தேசிய திறனாய்வு தேர்வு வரும் 18ம் தேதி நடக்கும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேசிய திறனாய்வு தேர்வு (என்.டி.எஸ்.இ) வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 10ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி இத்தேர்வு கூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment