Pages

Wednesday, October 04, 2017

தமிழகத்தில் கடும் எதிர்ப்பை மீறி 32 மாவட்டத்தில் நவோதயா பள்ளிகள்


தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 32 மாவட்டங்களில் விரைவில் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், தமிழக அரசின் இசைவு கிடைத்துள்ளதால் விரைவில் 32 மாவட்டங்களில் ஜவகர் நவோதயா பள்ளிகள் வரப்போகின்றன.

நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் அமைப்பதற்கான நிலம் தேடுவது, தமிழை ஒரு பாடமாக வைப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழக கொள்கைளுக்கு ஏற்ப திட்டங்கள் தெளிவாக இருந்தால் 32 மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி வீதம் திறக்க தமிழக அரசும் இசைவு தெரிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மேற்கண்ட 32 பள்ளிகளை திறக்க மத்திய அரசு வாய்ப்பு கொடுத்தும் அதை தமிழகம் நிராகரித்தது. தமிழக அரசின் முடிவை எதிர்த்து இந்த ஆண்டு பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment