Pages

Friday, October 06, 2017

தூய்மை பள்ளி' விருது : அக்., 31 வரை அவகாசம்


மத்திய அரசின், 'துாய்மை பள்ளி' திட்டத்துக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இத்திட்டத்தில், துாய்மையை பராமரிக்கும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில், துாய்மை பள்ளி விருது பெற, செப்., 1ல், 'ஆன் - லைன்' பதிவு துவங்கியது. அக்., 31 வரை, பதிவு செய்யலாம் என,அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, 'அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், துாய்மை பள்ளி விருதுக்கு, புகைப்பட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட இயக்குனர், நந்தகுமார் அறிவுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment