Pages

Tuesday, October 03, 2017

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு போட்டி


தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுதமிழ் வளர்ச்சி துறையின் தமிழ் மன்றம் சார்பில் மாநிலம் முழுவதும் நாளை மறுதினம் (6ம் தேதி) 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரையை பெற்று, போட்டி நாளன்று மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை அல்லது உதவி இயக்குநர்களிடம் நேரில் அளிக்க வேண்டும்.

போட்டி விதிமுறைகள், விண்ணப்ப படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.org என்ற வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

No comments:

Post a Comment