அனைத்து மாவட்டங்களிலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக, அக்., 3ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில், இளவயது வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்தது. அதில், 18 முதல், 20 வயது வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அடுத்த கட்டமாக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அடுத்த மாதம் துவக்கப்பட உள்ளது. அதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 3ல், வெளியிடப்பட உள்ளது. அதன்பின், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்படும்.
No comments:
Post a Comment