Pages

Thursday, August 31, 2017

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது


பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் என அறிவித்த மத்திய அரசு, பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் உத்தரவிட்டது. இதன் மூலம் போலி பான் கார்டுகள் எண்ணிக்கை பெருமளவும் குறையும் என்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்திருந்தார்.

மேலும், பான் கார்டுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், இதற்கான காலஅவகாசம் இன்றுடன் முடிவடைவதாகவும், இதன் பிறகு ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment