Pages

Monday, July 24, 2017

திருப்பூர் வடக்கு ஜாக்டோ ஜியோ அறைகூவல்

திருப்பூர் வடக்கு
இன்று 24-7-17 ஜாக்டோ ஜியோ கூட்டம் தேவாங்கபுரம் பள்ளியில் நடைபெற்றது.அனைத்து இயக்கப் பொறுப்பாளர்களும் கூடி கருத்துக்களை தெரிவித்தனர்.இதன் முடிவாக 5ம் தேதி சென்னை பேரணிக்கு 4ம் தேதி இரவு புறப்பட்டு 5ம் தேதி இரவு கிளம்பி 6ம் தேதி அதிகாலை வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு CRC க்கும் ஒரு பேருந்து வீதம் திருப்பூர் வடக்கிலிருந்து 11பேருந்துகளில் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. இயக்க வேறுபாடு இல்லாமல் CRC வாரியாக ஆசிரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

*51/2 இலட்சம் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் அணி திரண்டு சென்னையையே ஸ்தம்பிக்க வைக்க உள்ளனர்

*வரலாற்று சிறப்புமிக்க இப்போராட்டத்தில் பங்கேற்று வரலாற்றில் உங்கள் பெயரையும் வருங்கால சந்ததிகள் உச்சரிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள்

*கைகட்டி வேடிக்கை பார்ப்பவன் கையில் பூக்கள் விழுவதில்லை

*உங்களுக்கான மூச்சுக்காற்றை நீங்களே சுவாசியுங்கள்.

*ஓராயிரம் கைகள் ஒன்று கூடினால் மலையை தகர்க்கலாம்.மனதை கரைக்கலாம்

வரலாற்றில் இடம் பிடிப்போம்
இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம்

-தோழமையுடன் மணி

No comments:

Post a Comment