Pages

Tuesday, July 25, 2017

தமிழ் இலக்கணம், அகராதிக்கு புதிய மொபைல் 'ஆப்ஸ்'


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் தமிழ் பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தாய் மொழி மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ் பாடத்தை எளிமைப்படுத்தி படிக்கும் வகையில் மொபைல் 'ஆப்ஸ்' தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், வகுப்பு வாரியாக பாடங்கள் இடம்பெற்றிருக்கும்; இலக்கணம் கற்றுக் கொள்ளலாம்; மொழி சிறப்புகள், தமிழ் சொற்களின் அகராதியும் இடம் பெற்றிருக்கும். இந்த மொபைல் 'ஆப்சை' பதிவிறக்கம் செய்துள்ள அலைபேசி எண்ணுக்கு தினமும் தமிழ் அகராதி சொற்கள் மற்றும் இதர தகவல்கள் எஸ்.எம்.எஸ்., ஆக வரும். இதனால் அன்றாடம் புதிய சொற்களை அறிந்து கொள்ள முடியும். இதன்மூலம் தமிழ் படிப்பதற்கு தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை.

No comments:

Post a Comment