Pages

Friday, June 30, 2017

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் அதிரடி உயர்வு!


சுயநிதி கல்லூரிகளுக்கான பொறியியல் படிப்புகளின் கல்வி கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தை 2012-ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தி கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. அதன்படி சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான தரச்சான்று அல்லாத பாடப்பிரிவுக்கு கட்டணம், ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தரச்சான்று அல்லாத நிர்வாக ஒதுக்கீட்டுக்கான பாடப்பிரிவு கட்டணம், ரூ.70 ஆயிரத்திலிருந்து ரூ.85 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தரச்சான்று பெற்ற நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.87 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கட்டண உயர்வு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கானது மட்டும் எனவும் கல்வி கட்டண நிர்ணய குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment