Pages

Monday, May 01, 2017

ஜூன் முதல் எல்.இ.டி., பல்பு அரசு அலுவலகத்தில் கட்டாயம்


அரசு அலுவலகங்களில், எல்.இ.டி., பல்பு பயன்படுத்துவதை, ஜூன் மாதம் முதல் கட்டாயமாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில், மின் தேவை அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது. ஆனால், தமிழகத்தில், குறைந்த எண்ணிக்கையில் தான், எல்.இ.டி., பல்புகள் பயன்பாடு உள்ளது.

மார்ச் முதல், செப்., வரை, மின் தேவை அதிகம் இருக்கிறது. இதனால், தொடர்ந்து அதிக மின் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. எல்.இ.டி., பல்பு பயன்படுத்தினால், இப்பிரச்னையின் தீவிரம் குறையும். எனவே, ஜூன் மாதம் முதல், அரசு அலுவலகங்களில், எல்.இ.டி., பல்பு கட்டாயமாக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, அரசு உயரதிகாரி மூலம், அனைத்து துறைக்கும் கடிதம் எழுதப்படும். இவ்வாறு அவர் கூறினார். முறைகேடு? மத்திய அரசு, 'எனர்ஜி எபிசியன்ட்' என்ற நிறுவனம் மூலம், குறைந்த விலையில், எல்.இ.டி., பல்புகளை விற்கிறது.

இந்நிறுவனம் இதுவரை, 23 கோடி பல்புகளை விற்றுள்ளது. தற்போது, மின் வாரிய, மின் கட்டண மையங்களுக்கு அருகில், இந்நிறுவனம், எல்.இ.டி., பல்புகளை விற்கிறது. தமிழகத்தில், எல்.இ.டி., பல்பு வாங்குவதில், முறைகேட்டை தடுக்க, அரசு, மத்திய நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்ற வலியுறுத்தல் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment