Pages

Saturday, May 20, 2017

கலந்தாய்வு: 490 பேர் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு


தமிழகத்தில் இணையதளம் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 490 பேர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக தாங்கள் விரும்பிய இடத்துக்கு பதவி உயர்வு பெற்றனர். இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

இணையதளம் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 490 பேர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு ஆணை பெற்றுள்ளனர். தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற கலந்தாய்வில், 188 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தாங்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் ஆணை பெற்றனர்.

மேலும் 49 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் ஆணை பெற்றனர். முன்னதாக, வெள்ளிக்கிழமை (மே 19) நடைபெற்ற கலந்தாய்வில் 528 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் உத்தரவு பெற்றனர்.

No comments:

Post a Comment