வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் பான் எண்ணை தெரிவிப்பதற்கான கால அவகாசம், ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், மத்திய நேரடி வரி வாரியம், பிறப்பித்த உத்தரவில், 'வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் பான் எண்ணை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். 'பான் எண் இல்லாதவர்கள், விண்ணப்ப படிவம், 60ஐ பூர்த்தி செய்து தர வேண்டும்' என கூறப் பட்டிருந்தது. இதற்கு, கடந்த, பிப்., 28ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இப்போது, இதை, ஜூன், 30ம் தேதி வரை நீட்டித்து, மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
No comments:
Post a Comment