Pages

Saturday, April 01, 2017

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம்தேதி முதல் வேலைநிறுத்தம்: தமிழக அரசு ஊழியர்கள் தகவல்


அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “ 7வது சம்பள கமிஷன் குறித்து குழு அமைப்பதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஒரு ஆண்டு கழித்து தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இடைக்கால நிவாரணம் இதுவரை அறிவிக்கவில்லை. எனவே, 7வது சம்பள கமிஷன் அமலுக்கு வரும் வரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழக்காடு மன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்து, இதற்கான நோட்டீசையும் தமிழக அரசிடம் வழங்கியுள்ளோம்” என்றனர்.

No comments:

Post a Comment