Pages

Wednesday, April 12, 2017

எல்நினோ’ எதிரொலி காரணமாக தமிழகத்தில் வெயில் 110 டிகிரியை தொடும்


பசிபிக் கடல் பகுதியில் நிலவி வரும் வெப்பம் காரணமாக ‘எல்நினோ’ என்கிற கால நிலையில் பருவ மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கத்ரி வெயில் துவங்குவதற்கு முன்பே தமிழகத்தின் பல பாகங்களில் 100 டிகிரி வெப்பம் விளாசுகிறது. இதனால் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வறண்ட வானிலை காரணமாக மேகங்கள் இன்றி சூரியனின் ஒளிக்கதிர் நேரடியாக பூமியின் மீது விழுவதாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக வெயிலின் அளவு அதிகரித்து அதிகபட்சமாக 109 டிகிரியை எட்டியது.

நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் நிலவியது. வேலூர், திருத்தணி, சேலம், பாளையங் கோட்டை, மதுரை, தர்மபுரி மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் நிலவியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 99 டிகிரி வெயில் நிலவியது. ஆனால், சராசரியாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் 106 முதல் 109 டிகிரி அளவுக்கு வெயில் மாறி மாறி தகித்து வருகிறது. இந்நிலையில், அது மேலும் அதிகரித்து 110 டிகிரியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment