Pages

Tuesday, March 07, 2017

பழைய ஓய்வூதியத் திட்டம்: ஆய்வு குழுவின் காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவின் காலம் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், நிபுணர் குழு தனது அறிக்கையை இறுதி செய்து அரசுக்குச் சமர்ப்பிக்க வசதியாக, குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment