Pages

Wednesday, February 22, 2017

பத்தாம் வகுப்பு: நுழைவுச்சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத தத்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை வியாழக்கிழமை (பிப்.23) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயக்ககம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தத்கல்) கடந்த பிப்ரவரி 16, 17 தேதிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், வியாழக்கிழமை (பிப்.23) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment