பள்ளி பொதுத் தேர்வுகளை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே, 14க்கு முன், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க, மாநில தேர்தல் கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஏற்பாடுகளில், மாநில தேர்தல் கமிஷன் இதுவரை கவனம் செலுத்தவில்லை. இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 12; 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 19ல் வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போடலாமா என, மாநில தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.
No comments:
Post a Comment