Pages

Sunday, February 19, 2017

வருங்கால வைப்பு நிதியை பெறுவதில் புதிய திட்டம் | ஆன்லைன் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு


வருங்கால வைப்பு நிதியை எளிதில் திரும்ப பெறுவதற்கு வசதியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை திரும்ப பெறுதல், ஓய்வூதியம் இணைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நேரடியாக விண்ணப்பம் வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

இதனால் பணப்பலன்களை பெறுவதில் பயனாளிகளுக்கு கால தாமதம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, வருங்கால வைப்புநிதியை திரும்ப பெறுதல், ஓய்வூதியம் இணைத்தல் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இ.பி.எப்.ஓ.வின் அனைத்து துறை அலுவலகங்களையும் இணையதளம் மூலம் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் அனைத்தும் இரண்டு மாதங்களில் முடிக்கப்பட்டு மே மாதம் முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வருங்கால வைப்பு நிதியை கேட்டு ஆன்லைன் மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு மூன்று மணி நேரத்தில் தீர்வு காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment