Pages

Tuesday, December 13, 2016

இனி 'ஆன்லைனில்' கட்டணம் : பள்ளிகளுக்கு அரசு உத்தரவு


சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜனவரி முதல், 'ஆன்லைன்' மூலம் கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 'ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மக்கள் மாற வேண்டும்' என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது; மத்திய அரசு துறைகள், இந்த வசதியை ஏற்படுத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மாறுகின்றன. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய செயலர் ஜோசப் இம்மானுவேல் அனுப்பியுள்ள சுற்றிக்கை: நாடு முழுவதும் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், அடுத்தாண்டு ஜனவரி முதல், கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்டவற்றை, ஆன்லைன் மூலம் பெற வேண்டும்; இதற்கான ஏற்பாடுகளை செய்வதுடன், பெற்றோர்களுக்கு இதுதொடர்பாக உரிய தகவல் அளிக்கப்பட வேண்டும். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு, வங்கி கணக்கு மூலமே சம்பளம் மற்றும் இதர பண உதவி கள் வழங்க வேண்டும்.

பள்ளிகளுக்கான ஒப்பந்தங்களுக்கு, இனிமேல், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தப்பட வேண்டும்; ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் கூலிகள் கூட, ஆன்லைன் மூலமே வழங்க வேண்டும். 'பிரதமர் மோடியின் திட்டமான ரொக்கமற்ற பரிவர்த்தனை' என்ற இலக்கை எட்ட, கருத்தரங்குகள், நிகழ்ச்சிகள் மூலம், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment