Pages

Monday, November 21, 2016

நெருங்கி வரும் மாத சம்பளம்: ஏ.டி.எம். மிஷின் சீரமைப்பு பணி தீவிரம்!


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து மக்கள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாதச் சம்பளம் பெறுவதிலும் குழப்பம் நிலவி வருகிறது. பெரும்பாலான தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் நவம்பர் மாத ஊதியம் டிசம்பர் முதல்வாரத்தில் வழங்கப்படும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு முன்பாக, அனைத்து ஏ.டி.எம்.களையும் மறு கட்டமைப்பு செய்யும் பணியை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் 2,000 ரூபாய் நோட்டின் அளவு சிறியதாக இருப்பதுதான். இதனால் ஏடிஎம் மிஷினுக்குள் வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 10,000 க்கு மேற்பட்ட ஏ.டி.எம்.கள் வீதம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும் நவம்பர் மாத ஊதியத்தை பெறுவதில் மக்களுக்கு சிக்கல் ஏற்படக்கூடாது என்பதால் இந்த பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 2 லட்சத்து 2000 ஏ.டி.எம்.களை, அடுத்த 10 அல்லது 12 நாட்களுக்குள் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கும் வகையில் மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment