Pages

Wednesday, November 23, 2016

முதுநிலை ஆசிரியர் நியமனம்: ஒரு வாரத்தில் அறிவிப்பு


தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாக உள்ளது. தமிழகத்தில், அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, பாடம் எடுக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில், 1,500 இடங்கள் காலியாக உள்ளன.

'விரைவில் நேரடி நியமனம் நடக்கும்' என, மார்ச்சில், டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், இதுவரை நியமன பணிகள் துவங்கவில்லை. இதுகுறித்து, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளிடமிருந்து, டி.ஆர்.பி.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., ஒரு வாரத்தில் வெளியிடும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment