Pages

Tuesday, November 15, 2016

விரலில் மை


வங்கிகளில் இனி பணம் எடுக்கச் செல்பவர்களின் கைகளில் மை வைக்கப்படும் என்றும் இதன் மூலம் கறுப்பு பணத்தை ஒருவரே மாற்றி மாற்றி டெபாசிட் செய்வதை தடுக்க முடியும் என்றும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாயை கைகளில் வைத்துக்கொண்டு மாற்ற முடியாமல் ஏழை மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். ஏடிஎம் வாசலிலும் சாமானிய மக்கள்தான் காத்திருக்கின்றனர்.
தினசரி ஒரு அறிவிப்பு, புதிய புதிய கெடுபிடிகளை விதித்து வருகிறது மத்திய அரசு. இந்த நிலையில் மை வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது சாமான்ய மக்களை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

No comments:

Post a Comment