Pages

Sunday, September 25, 2016

அக்.8 முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை


வங்கிகளுக்கு அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணபரிவர்த்தனை செய்து கொள்ளுமாறு வங்கி நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. தமிழகத்தில் 500 தனியார் வங்கிகள் உள்பட 8,500 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

அடுத்த மாதம் வங்கிகளுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அக்டோபர் 8ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 9ம் தேதி ஞாயிறு, 10ம் தேதி ஆயுதபூஜை, 11ம் தேதி விஜயதசமி, 12ம் தேதி முகரம் பண்டிகை என தொடர்ந்து ஐந்து நாட்கள் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கும் மேற்கண்ட ஐந்து நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாட்களும் வங்கிகளில் எந்தவித பணபரிவர்த்தனையும் நடக்காது என்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment