தொடக்க கல்வி பட்டயப் படிப்பு ஆசிரியர் பயிற்சியில் (டிடிஎட்) சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் நாள் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவ, மாணவியர் ஒற்றை சாளர முறையின் கீழ் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் ஆகியவற்றில் வழங்கப்பட்டு வருகின்றன. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250, மற்றவர்களுக்கு 500க்கு வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் வினியோகிக்கும் நாள் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17ம் தேதி மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும்.
No comments:
Post a Comment