Pages

Wednesday, May 18, 2016

தபால் ஓட்டுப்பதிவு பல மடங்கு உயர்வு


கடந்த இரண்டு தேர்தலை விட, இம்முறை அதிகளவில், தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், ஒரு லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகின. அடுத்து, 2014 லோக்சபா தேர்தலில், 85 ஆயிரம் தபால் ஓட்டுகள் பதிவாகின. இம்முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், வேன் டிரைவர்கள் என, மொத்தம், 6.26 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.இவர்களில், 14ம் தேதி வரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர், தபால் ஓட்டை பதிவு செய்தனர். அதன் பின்னும் ஏராளமானோர், தபால் ஓட்டு போட்டுள்ளனர். எனவே, இம்முறை, 4 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகியிருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment