Pages

Saturday, May 07, 2016

144 தடை உத்தரவு கிடையாது ராஜேஷ் லக்கானி திட்டவட்டம்


'தமிழகத்தில், சட்டசபை தேர்தலை ஒட்டி, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படாது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:ஓட்டுப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். பாதுகாப்பு பணிக்கு, 68 கம்பெனி, மத்திய ரிசர்வ் போலீசார்; 64 கம்பெனி, எல்லை பாதுகாப்பு படை; 71 கம்பெனி, மத்திய தொழில் பாதுகாப்பு படை; 20 கம்பெனி, இந்திய - திபெத் பாதுகாப்பு படையினர்; 33 கம்பெனி, சிறப்பு பாதுகாப்பு படை; 20 கம்பெனி, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர். எனவே, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது. கோவா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து, 22 கம்பெனி, துணை ராணுவ வீரர்கள் வர உள்ளனர்.

No comments:

Post a Comment