'தமிழகத்தில், சட்டசபை தேர்தலை ஒட்டி, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படாது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:ஓட்டுப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். பாதுகாப்பு பணிக்கு, 68 கம்பெனி, மத்திய ரிசர்வ் போலீசார்; 64 கம்பெனி, எல்லை பாதுகாப்பு படை; 71 கம்பெனி, மத்திய தொழில் பாதுகாப்பு படை; 20 கம்பெனி, இந்திய - திபெத் பாதுகாப்பு படையினர்; 33 கம்பெனி, சிறப்பு பாதுகாப்பு படை; 20 கம்பெனி, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர். எனவே, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது. கோவா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து, 22 கம்பெனி, துணை ராணுவ வீரர்கள் வர உள்ளனர்.
No comments:
Post a Comment