Pages

Tuesday, April 19, 2016

பி.எஃப். புதிய விதிமுறைகளை ரத்து செய்தது மத்திய அரசு


பி.எஃப். புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்தது. 58 வயதுக்கு முன் பி.எஃப். பணத்தை எடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டது. புதிய கட்டுபாட்டு அமலாக்கத்தை ஏற்கனவே மூன்று மாதம் மத்திய அரசு ஒத்திவைத்திருந்தது.

நாடு முழுவதும் தொழிலாளர்கள் எதிர்ப்பை அடுத்து பி.எஃப். அறிக்கையை மத்திய அரசு தற்போது ரத்து செய்துள்ளது. அரசு அறிவிக்கை ரத்தானதை தொடர்ந்து பி.எஃப். நிதியை திரும்ப எடுப்பதற்கான கட்டுப்பாடு நீங்கியதாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment