Pages

Wednesday, April 20, 2016

தபால் ஓட்டு போடும் கடைசி தேதி 18ஏப்ரல்


தமிழகத்தில், 4.73 லட்சம் வாக்காளர்கள், தபால் ஓட்டு போட உள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் பணியில், 3 லட்சத்து 3 ஆயிரம் அரசு ஊழியர்கள்; ஒரு லட்சம் போலீசார்; 70 ஆயிரம் டிரைவர், வீடியோகிராபர் மற்றும் பிற ஊழியர்கள் என, மொத்தம் 4.73 லட்சம் ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களுக்கு, மே 5ம் தேதி, தபால் ஓட்டு சீட்டு வழங்கப்படும். அவர்கள், மே 6ம் தேதியில் இருந்து, மே 18ம் தேதி வரை, தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி அலுவலர் அறை முன் வைக்கப்பட்டிருக்கும், ஓட்டுப் பெட்டியில், தபால் ஓட்டுகளைப் போடலாம்.
தபால் மூலமாகவும், தபால் ஓட்டுகளை, சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பலாம்.

No comments:

Post a Comment