Pages

Wednesday, February 24, 2016

அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் மாணவர்கள் கல்வி கட்டணம் எவ்வளவு? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் நர்சரி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 1–வது வகுப்பு முதல் 8–வது வகுப்பு வரை ஏழை மாணவர்கள் உள்ளிட்டவர்கள் 25 சதவீதம் பேர் கட்டணம் இன்றி சேர்க்கப்படுகிறார்கள். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அந்த பள்ளிகளுக்கு அரசு செலுத்துகிறது.

அந்த வகையில் 2015–2016 கல்வி ஆண்டுக்கு மலைப்பகுதிகளில் 1–வது வகுப்புக்கு ஒரு மாணவருக்கு ரூ.23 ஆயிரத்து 805 என்றும் 8–வது வகுப்பு படிக்கும் மாணவருக்கு ரூ.31 ஆயிரத்து 49 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதி இல்லாத மற்ற பகுதிகளில் 1–வது வகுப்பு மாணவருக்கு ரூ.23 ஆயிரத்து 575 என்றும், 8–வது வகுப்புக்கு ரூ.30 ஆயிரத்து 764 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்படி பிற வகுப்புகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டார். அவர் அறிவித்துள்ள இந்த கட்டணம், அரசு தனியார் பள்ளிகள் நிர்ணயித்த கட்டணம் ஆகிய இரண்டில் எது குறைவாக உள்ளதோ அந்த கட்டணம், பள்ளிக்கு கொடுக்கப்படும்.

No comments:

Post a Comment