Pages

Thursday, January 07, 2016

10ம் வகுப்பு மாணவர்கள் சுமார்


       தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி கழகம் (என்சிஇஆர்டி) சார்பில் சமீபத்தில் நாடு முழுவதிலும் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

            33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 7216 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 2.77 லட்சம் மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 41% மாணவர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் சரியாக பதிலளித்துள்ளனர். கணிதத்தில் 40% மாணவர்களும், அறிவியலில் 43% மாணவர்களும், சமூக அறிவியலில் 47% மாணவர்களும், இந்திய மொழிகளில் 53% மாணவர்கள் மட்டுமே சரியான பதில் அளித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் 500ல் 277 மாணவர்களும், அரசு பள்ளிகளில் 236 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 246 மாணவர்கள் மட்டுமே சிறந்தவர்களாக உள்ளதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment