Pages

Friday, December 04, 2015

அலைபேசி 'சார்ஜ்' குறைவதை தவிர்ப்பது எப்படி


வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டுள்ளதால், அலைபேசிகளில் குறைந்த அளவே சார்ஜ் இருப்பதால், அதை பக்குவமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 'நெட்வொர்க் பிசி'யாக இருப்பதால், நினைத்தவுடன் யாருக்கும் போன் இணைப்பு கிடைப்பதில்லை. அதனால் பலர், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்புகின்றனர். அதிலும் சிக்கல் ஏற்பட்ட போது, பலருக்கு இணையதளம் செயல்பட்டு, 'வாட்ஸ் ஆப்' இயங்கியது.

அதனால், 'வாட்ஸ் ஆப், டுவிட்டர், பேஸ்புக்' மூலம் தகவல் பரிமாறினர்.பெரும்பாலானோர், 'ஸ்மார்ட் போன்' பயன்படுத்துவதால், அவர்களுக்கு அடிக்கடி வாட்ஸ் ஆப் மெசேஜ் வந்து அதிகளவில் சார்ஜ் இறங்கும்.அதை தவிர்க்க என்ன செய்யலாம்?

* ஸ்மார்ட் போனை, 'ப்ளைட் மோடு' எனப்படும் விதத்தில் மாற்றி வைத்தால், 'ஸ்விட்ச்' ஆப் செய்தது போல, பேட்டரியில் உள்ள மின் சக்தி சேமிக்கப்படும்

* 'செட்டிங்' சென்று, இன்டர்நெட் இணைப்பை, 'ஆப்' செய்து வைக்கலாம்* மொபைல் போனின் ஒரிஜினல் நெட்வொர்க்கை மாற்றி வைத்தாலும், 'சைலன்ட் மோட்' போல் பேட்டரி சேமிப்பாகும்; தேவைப்படும் போது மட்டும் தங்கள் நெட்வொர்க்கை மாற்றி வைத்து பயன்படுத்தலாம்

No comments:

Post a Comment