நீர்நிலைகளை மாசுபடுத்தல் தடுத்தல் குறித்து 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் நிலத்தடி நீர் மாசுபடுதல் மற்றும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள், புனித நதி, நதி மற்றும் நீர்நிலைகளின் மாசுபாட்டை தடுத்தல் ஆகிய தலைப்புகளில் பள்ளி வாரியாக அக்.,25க்குள் ஓவியப்போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 32 மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் 50 மாணவர்கள் சென்னையில் நவ.,15ல் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். நீர்நிலை மாசுபடுதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த இப்போட்டிகள் நடத்தப்படுகிறது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment