Pages

Monday, October 12, 2015

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக கே.அருள்மொழி நியமனம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக கே. அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு தலைமைச் செயலர் கு. ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார். கே. அருள்மொழி இந்தப் பதவியில் 6 ஆண்டுகளோ அல்லது 62 வயது நிறைவடையும் வரையிலோ நீடிப்பார் என்று அந்த உத்தரவில் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உத்தரவு ஆளுநர் உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவராக இதுவரை சி.பாலசுப்பிரமணியன் இருந்து வந்தார்.

No comments:

Post a Comment