Pages

Sunday, September 06, 2015

பி.எப்ஃ காப்பீட்டு தொகை உயர்கிறது

��TNPTF MANI��

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கான காப்பீடு தொகையை 3 லட்சத்து ஆறாயிரம் ரூபாயில் இருந்து ஐந்தரை லட்சமாக உயர்த்த பிஎஃப் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முடிவு வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள பிஎஃப் ஆணைய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறகு பிஎஃப் அமைப்பின் அறக்கட்டளை உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் தர வேண்டும். இந்த ஒப்புதல் தரப்படும் பட்சத்தில் 6 கோடிக்கு மேற்பட்ட பிஎஃப் சந்தாதாரர்கள் பயன்பெறும் வாய்ப்பு ஏற்படும்.
தற்போதைய நிலையில் ஒரு ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து பிஎஃப் சந்தா தொகையை செலுத்தி வருபவர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்துக்கு காப்பீட்டு பலன் வழங்கப்படும்.
கடைசி 12 மாதங்களில் தொழிலாளி பெற்ற ஊதியத்தின் ஒரு மாத சராசரியின் 20 மடங்குத் தொகை காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும். இதன்படி அதிகபட்ச காப்பீட்டு தொகையாக 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பெற முடியும். இத்தொகையை 5 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment