Pages

Wednesday, September 23, 2015

பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம்.முதல்வர் அறிவிப்பு

அரசின் 107 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக, கடந்த 4 ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் முதல்வர் பேசியதாவது,
அரசின் 107 தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாக, கடந்த 4 ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 5 தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய தொடக்கப்பள்ளிகள் துவங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி்களில் 770 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment