Pages

Friday, August 21, 2015

தத்கால் ரயில் முன்பதிவில் புதிய மாற்றம்: அடையாளச் சான்று இனி வேண்டாம்

தத்கால் ரயில் பயணச் சீட்டு முன்பதிவில் புதிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, இனி தத்கால் முன்பதிவு பயணச் சீட்டு பெறும்போது அடையாளச் சான்று நகலை சமர்ப்பிக்க தேவையில்லை. அதேபோல, இணையத்தில் முன்பதிவு செய்யும் அடையாள அட்டையின் எண்ணை பதிவு செய்ய தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பயணத்தின்போது அசல் அடையாள சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரயில் நிலையக் கவுன்ட்டர்களில் தத்கால் முன்பதிவின்போது, அடையாளச் சான்று நகலை இணைப்பது வழக்கமாக இருந்தது.

இனி, தத்கால் முன்பதிவு பயணச் சீட்டு பெறும்போது அதை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், தத்கால் முன்பதிவில் சமர்ப்பிக்கும் அடையாள அட்டையைத்தான் பயணத்தின் போதும் காண்பிக்க வேண்டும் என்ற நடைமுறைக்குப் பதிலாக, இப்போது பிற அடையாள அட்டையைக் காண்பிக்கலாம். 30 சதவீதம்: ரயில்களில் முன்பதிவு செய்யும்போது, 30 சதவீத பயணச் சீட்டுகள் தத்கால் முன்பதிவுக்கு ஒதுக்கப்படுகின்றன. பயண தேதிக்கு, ஒரு நாளுக்கு முன், ரயில் நிலைய முன்பதிவு மையங்கள், இணையதளத்தின் மூலம் தத்கால் முன்பதிவு செய்து கொள்ளலாம். அப்போது சமர்ப்பிக்கும் புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டையை, பயணத்தின்போதும் எடுத்துச் செல்ல வேண்டும். பிற அடையாள அட்டை காண்பித்தால், பயணச் சீட்டு பரிசோதகர் ஏற்பதில்லை. இதனால், பல நேரங்களில் பயணிகள், அபராதம் செலுத்த வேண்டி இருந்தது. இப்போது மாற்று வசதியாக, தத்கல் முன்பதிவின்போது சமர்ப்பிக்கும் அடையாள அட்டையின்றி, புகைப்படத்துடன்கூடிய வேறு அடையாள அட்டை கொண்டு பயணிக்கும் வசதியை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

என்னென்ன அடையாள அட்டைகள்?: வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசு வழங்கும் புகைப்படத்துன்கூடிய அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, கல்லுôரி அடையாள அட்டை, தேசிய வங்கி கணக்குப் புத்தகம், புகைப்படத்துடன்கூடிய கிரெடிட் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட, 10 வகையான அடையாள அட்டைகளைக் காண்பித்து பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment