Pages

Monday, August 10, 2015

தமிழகத்தில் 69% சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.

அதனால், ஒசி பிரிவு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் லோகேஸ்வரி உள்ளிட்ட 8 மருத்துவ கல்லூரி மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment