Pages

Thursday, July 02, 2015

இணையதள மின் கட்டண சேவை நிறுத்தம்

தமிழ்நாடு மின் வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பு: மின் வாரிய இணையதள சேவை, தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக, வரும், 4ம் தேதி மாலை, 3:00 மணி முதல், 5ம் தேதி மாலை, 3:00 மணி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. அந்த நேரத்தில், இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்துதல், மின் கட்டண விவரம் அறிதல் மற்றும், 'டெண்டர்' தொடர்பான விவரங்களைப் பெற முடியாது. எனவே, 4ம் தேதிக்கு முன், நுகர்வோர், தங்களின் மின் கட்டணத்தைச் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment