Pages

Friday, June 26, 2015

டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி

தமிழக அரசின், இ - சேவை மையங்களில், 'டெபிட் கார்டு' மூலம் பணம் செலுத்தும் திட்டம், விரைவில் அறிமுகமாகிறது. இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, இ - சேவை மையங்களில், ஆன் - லைன் மூலம் அரசுத் துறைகளின் பல சேவைகள், மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை, மாவட்ட அளவில் கண்காணிக்க, மேலாளர் பதவியில் பொறியியல் பட்டதாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள், மாவட்டங்களில் உள்ள அனைத்து, இ - சேவை மையங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மையங்களில், ஜாதி, வருமானம் உட்பட, 11 சான்றிதழ்களை பெறுவதற்கான கட்டணம், 50 ரூபாய். அதை பயனாளிகள் ரொக்கமாக செலுத்துகின்றனர். இனி, அந்தக் கட்டணத்தை, 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ - வாலட் கார்டு' மூலம் செலுத்தும் வசதி அறிமுகமாக உள்ளது.

அதற்கான பணி வேகமாக நடந்து வருகிறது. 'டெபிட் கார்டு' இல்லாத வங்கி வாடிக்கையாளரே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. அதனால் இந்த வசதியை, ஏராளமானோர் பயன்படுத்துவர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment