Pages

Monday, June 22, 2015

அட்டையின்றி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் வசதி

வங்கி அட்டைகள் இன்றி, ஏ.டி.எம்., மையங்களில் இருந்து பணம் எடுக்கும் வசதி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.வாடிக்கையாளர்கள், தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைக்கு சென்று, தங்களுடைய மொபைல் எண்ணை பதிவு செய்தால், நான்கு இலக்க, 'எம்பின்' (மொபைல் பர்சனல் ஐடென்டிபிகேஷன்) கிடைக்கும். இதை பணப் பரிவர்த்தனைக்கான, 'பின்' நம்பராக பயன்படுத்தலாம்.

அனைத்து வங்கிகளும் இதற்கான முன்னேற்பாடுகளை செய்ய துவங்கிவிட்டன. சில வங்கிகள், இதற்காக, புதிய ஏ.டி.எம்., இயந்திரங்களை நிறுவுகின்றன. சில வங்கிகள், பழைய ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள மென்பொருள் தொழில்நுட்பத்தை மாற்றி வருகின்றன.இந்த வசதி நடைமுறைபடுத்தப்பட்ட பின், வெளியூர் செல்லும் வாடிக்கையாளர்கள், வங்கி அட்டையின்றி, ஏ.டி.எம்.,மில் இருந்து பணத்தை எடுக்கலாம்.

No comments:

Post a Comment