Pages

Monday, June 08, 2015

ரயிலில் அபாயச் சங்கிலி இனி இருக்காது.3000கோடி இழப்பால் மாற்று நடவடிக்கை

ரயில் பயணத்தின் போது, அவசர தேவைக்காக, அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தும் வசதி இனி இருக்காது. இதற்கு மாற்றாக, டிரைவரை மொபைல் போனில் அழைத்து, ரயிலை நிறுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொபைல் போன் எண்: சமீப காலமாக, அவசியம் இல்லாத சிறிய காரணங்களுக்காகக் கூட, சிலர் சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்துவது வாடிக்கையாக இருக்கிறது.இதன் காரணமாக, ரயில்கள் தாமதமாகச் செல்ல நேரிடுவதோடு, ரயில்வே துறைக்கு இழப்பையும் ஏற்படுத்துகின்றன. இந்த சம்பவங்கள் மூலமாக மட்டும், 3,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில், தெரிய வந்துள்ளது.

இதற்கு தீர்வாக, ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் துணை டிரைவர் ஆகியோரின் மொபைல் போன் எண்கள் அச்சடிக்கப்பட்டு, பெட்டிகளில் ஒட்டப்பட்டு இருக்கும். அவசரத் தேவையின் போது, பயணிகள், டிரைவரை மொபைல் போனில் அழைத்து, ரயிலை நிறுத்திக் கொள்ளலாம். என்ன மொழி? பல மொழி பேசுவோர், ரயிலில் பயணிக்கும் போது, பயணி பேசும் மொழியை, டிரைவர் புரிந்து கொள்ள இயலாது. மொபைல் போனில் சிக்னல் கிடைக்காவிட்டாலும், புகார் தெரிவிக்க இயலாது. மொபைல் போனிலும், சிலர் தேவையில்லாமல் டிரைவரை அழைத்து, ரயிலை நிறுத்த வாய்ப்பு உள்ளது. இவற்றையும் ரயில்வே துறை அதிகாரிகள் யோசிக்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment