ஆதார் எண் இணைக்கவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. வாக்காளர்களின் விவரங்களை செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி வாக்காளர்களின் ஆதார் எண், செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியன வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சியை தவிர எஞ்சிய 30 மாவட்டங்களிலும் 100 சதவீத விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்ந்லையில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீடிக்கும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது குறித்த முழுவிவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment