Pages

Friday, May 08, 2015

நில கையகப்படுத்தல் மசோதா

நிலம் கையகப்படுத்தும் மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

கையகப்படுத்தும் நிலத்திற்கு கிராமப் பகுதியாக இருந்தால் சந்தை விலையில் 4 மடங்கும், நகர்ப்புறங்களில் 2 மடங்கு விலையும் வழங்கப்படும்

நிலத்தின் விலை முழுவதும் கொடுத்து முடியும் வரை நில உரிமையாளருக்கு நிலத்தின் உரிமை உண்டு

பொதுத்துறை மற்றும் தனியார் துறை திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் போது நில உரிமையாளர்களின் 70 சதவீத ஒப்புதல் அவசியம்

தனியார் திட்டங்களுக்கு கையகப்படுத்தும்போது 80சதவீத ஒப்புதல் அவசியம்.

மறுகுடியேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு,இழப்பீடும் வழங்கப்பட்ட பின்னர்தான் நிலம் கையகப்படுத்தும் பகுதியில் வசிப்போர் வெளியேற்றப்படுவர்

விவசாயப்பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் போது வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசுகள் கட்டுப்பாடு விதிக்கமுடியும்

பொதுமக்கள் நலனுக்கான செயல்பாட்டிற்கு மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும்

எதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு நிலத்தை மாநில அரசுகள் திருப்பி அளிக்கலாம்.

No comments:

Post a Comment