tnptfmani.blogspot.com
தமிழகத்தில் சட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் மே 8-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என, அம்பேத்கார் சட்டப்பல்கலைகழக துணைவேந்தர் வணங்காமுடி அறிவித்துள்ளார்.
மேலும் வரும் கல்வியாண்டு முதல், பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைக்கேற்ப பி.எல்.பட்டத்திற்கு பதிலாக எல்.எல்.பி. பட்டம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பி.சி.ஏ.எல்.எல்.பி. மற்றும் பி.பி.ஏ.எல்.எல்.பி ஆகிய இரண்டு புதிய பாடப்பிரிவுகளை அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகம் தற்போது அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி மாணவர்கள் சேர்க்கைக்கான எண்ணிக்கையும் 660 வரை உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment